நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்.
இவரின் அக்கா ரேவதி சுரேஷ் குண்டாக இருந்ததால் தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து அவர் முழுநீள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது எடையால் நான் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுள்ளேன், என் அம்மா மற்றும் தங்கையுடன் என்னை ஒப்பிடுகையில் தொடர்ந்து ஏளனம் செய்யப்பட்டேன்.
நான் அவர்களைப் போல அழகாக இல்லை. நான் சாதாரணமாக இல்லை, என்னிடம் ஏதோ தவறு இருப்பதாக நான் எப்போதும் உணர்ந்தேன். நான் கண்ணாடி முன் பல மணி நேரம் செலவிட்டேன், எனக்கு என்ன தவறு? நான் ஏன் என்னை அழகாகக் பார்க்கமுடியவில்லை? ஒரு கட்டத்தில், நான் என்னை வெறுத்தேன்.
என் சகோதரி எப்போதும் என்னை மிகவும் பாதுகாத்து வருகிறார், மற்றவர்களிடம் இருந்து அவர் தான் காப்பாற்றி வருகிறார்”
மேலும் தற்போது யோக பயிற்சியின் மூலமாக தனது எடையை குறைந்துள்ள ரேவதி சுரேஷ், புகைப்படத்துடன் இது குறித்து முழுநீள பதிவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram