வளர்ந்து வரும் நேரத்தில் EX-காதலனால், ராஷ்மிகாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை.!

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என்று ஒரு ரவுண்ட் போய் வந்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகள் லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் நடிகை நயன்தாராவுக்கு கூட சற்று பொறாமை தான் என்று கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் காதலில் ஈடுபட்டார். அவரும் ஒரு முன்னணி நடிகர் தான். நட்பாக துவங்கிய இவர்களது உறவு நாளடைவில் காதலாக மாறி, நிச்சயதார்த்தம் வரை சென்றது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இதன் காரணமாக இருவரும் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், இருந்து வந்தனர். சமீபத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற பாடல் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா பதிவிட்டு இருந்தார். இதை கவனித்த அவருடைய முன்னாள் காதலர் ரக்ஷித் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மேலும் உயர வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு ராஷ்மிகா எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. இதனை கண்ட ரசிகர்கள் ராஷ்மிகா வுக்கு எதிராக விமர்சனங்களை வைக்க துவங்கினர். உடனடியாக இது ராஷ்மிகாவின் பார்வைக்கு செல்ல ஒரு ஸ்மைலி போட்டு முடித்துக்கொண்டார். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னாள் காதலர் ரக்ஷித் ஷெட்டிக்கு ஆதரவாக கருத்துகள் குவிந்து வருகின்றன. நடிகை ராஷ்மிகா புகழ் போதையில் மோசமாக நடந்து வருகிறார் என்று அவர் மீது ஒரு நெகடிவ் இமேஜ் வைக்கப்பட்டுள்ளது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை. தற்போது இதற்கான ஸ்க்ரீன்ஷாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.