நண்பனுக்காக காதல் கணவரை போட்டுத் தள்ளிய மனைவி..

தமிழகத்தில் நெருங்கிய பழகிய நண்பனுக்காக கணவரை தீர்த்துக் கட்டிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகேயுள்ள சீங்கோட்டை பகுதியைச்சேர்ந்தவர் தனபால், இவரது மனைவி சத்யா.

இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், பேகேப்பள்ளி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டதும், ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது தனபால் சடலமாக கிடந்துள்ளார்.

உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட, விரைந்து வந்த அதிகாரிகள் சத்யாவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சத்யா முன்னுக்கு பின்னாக கூற, பொலிசாருக்கு சத்யா மீது சந்தேகம்வலுத்துள்ளது. இதனால் அவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுதங்கள் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மணிகண்டன் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் நண்பரை அடிக்கடி பார்க்க வருவார்.

இதன் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. எங்களின் நாட்பு நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியது.

தன்னுடைய கணவர் வேலைக்கு சென்ற பின்னர், அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், தன்னுடைய கணவரிடம் கூறியதால், அவர் தன்னிடம் வந்து சத்தம் போட்டார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் அவரை கொலை செய்துவது தான் சரியான் முடிவு என்று நினைத்து, சம்பவ தினத்தன்று, கணவன் தூங்கியதும், மணிகண்டனை போன் செய்து அழைத்து கணவனை தீர்த்து கட்டிவிட்டதாக கூறியுள்ளார்.

இப்போது இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.