80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் பாண்டியன். 1983ல் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருந்தார் பாண்டியன்.
இதையடுத்து முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் படத்தில் நடித்து வந்த பாண்டியன் அரசியலிலும் ஈடுபட்டு பிரச்சாரத்திலும் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட நட்பினால் தீய பழக்கத்தை கற்றுக்கொடுத்துள்ளார்.
கடைசியாக புதுசு கண்ணா புதுசு என்ற படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே வருடமே உடல் நலக்குறைவால் மதுரையில் மரணமடைந்தார்.
மரணத்திற்கு என்ன காரணம் என்று பலர் கூறி வந்த நிலையில், நண்பர்களுடன் எப்போது விடாமல் அவர்களுக்காக வாழ்ந்தும் வந்தார். ஆனால் அப்படி இருந்த பாண்டியன் பணம் இல்லாத நேரத்தில் நண்பர்கள் கூட உதவி செய்யாமல் கை நழுவி விட்டார்களாம்.
மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய பாண்டியனின் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.







