தற்போதைய தென்னிந்திய சினிமாவில் காதல் ஜொடிகளாக ஊர்சுற்றி வருபவர்களில் நடிகை நயன் தாராவும் சேர்ந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணமாகாமல் டேட்டிங்கில் இருந்து வருகிறார்.
எப்போது திருமணம் என்ற கேள்விக்கு பதில் கூறாமல் இருவரும் ஜோடியாக விமானத்தில் பறந்தும் சுற்றியும் வருகிறார்கள். சமீபகாலமாக கொரானா லாக்டவுன் என்பதையும் மீறி நயன்தாரா தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
விக்னேஷ் சிவனும் நயனும் தங்களுடைய காதலின் அடையாளமாக அவ்வப்போது தங்களுடைய ரொமான்டிக்கான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது நயன்தாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில், விக்னேஷ் சிவனுடன் தாறுமாறாக ரொமான்ஸ் செய்திருக்கிறார் நயன்.
டாப் ஆங்கிளில் இருவரும் கட்டியணைத்தபடி ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
😍Click 📸 #vickyNayan pic.twitter.com/Q79XwYFQGr
— Nayanthara✨ (@NayantharaU) November 12, 2020