எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் குஹாசினியா இது..!!

கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். அதில் இவருக்காக 16 பெண்கள் போட்டி போட்டார்கள்.

கடைசியில் 4 பேரை தேர்வு செய்த அவர் அதில் இருந்து ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்பார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் போட்டி போட்ட பெண்களில் ஒருவர் குஹாசினி.

இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் ஒரு பேட்டியில், 16 பெண்களை ஏமாற்றியதற்கு நான் ஆர்யாவை அறைந்து இருக்க வேண்டும். அவருடைய மதத்தில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் அவர் உறுதியாக இருந்தால் ஏன் கொள்வதில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

பிறகு நடுவில் காணாமல் போயிருந்த இவர் இப்போது செம மாடர்ன் உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்த அது இப்போது வைரலாகி வருகிறது.