தாய்மை உணர்வை நெகிழ்ச்சியுடன் உணர்த்தும் வீடியோ..!

தனது குழந்தைக்கு ஓர் ஆபத்து என்ற பட்சத்தில், அக்குழந்தையின் தாய் எதனையும் செய்யும் துணிவை கொண்டது தாய்மை. ஆறறிவுள்ள மனிதர்களுக்கும், ஐந்தறிவு கொண்ட மிருகங்களுக்கும் தாய்மை உணர்வென்பது வேறு கிடையாது.

எந்த வகையான உயிரினம் என்றாலும் தாய்மை உணர்வு ஒன்றே. கர்நாடக மாநிலத்தில் உள்ள மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளில் கடந்த சில வாரமாக கனமழையானது பெய்து வருகிறது. இதனால் சாலையெங்கும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், பல ஊர்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டத்தின் தர்பூர் கிராமத்தில் நாயொன்று தனது குட்டிகளை வாயில் கவ்விக்கொண்டு நீர் இல்லாத பகுதியில் பத்திரமாக கொண்டு சேர்த்து இருக்கிறது. இந்த நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.