ஓய்வில்லாமல் நடிக்கும் நடிகர் விஜய் ஆண்டனி!

கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி ஒரு நாள் கூட வீணாக்காமல் படங்களில் நடித்து வருகிறாராம்.

கொரோனா காரணமாக 5 மாதங்களாக முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா இப்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இதையொட்டி சில படங்களின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல முன்னணி நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் அரசு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒரே ஒரு நாள் கூட வீணாக்காமல் மாறி மாறி படங்களில் நடித்து வருகிறாராம். தற்போது மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறாராம்.