ஏ.ஆர்.ரகுமான் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த வருமான வரித் துறை!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இங்கிலாந்தைச் சார்ந்த மொபைல் நிறுவனத்திற்கு ரிங்டோன் இசை அமைக்க ஒப்பந்தம் செய்து கொடுத்தார். இதற்கு ஊதியமாக அவருக்கு வழங்க கூடிய 3 கோடியே 47 லட்சம் ரூபாயை ஆர்.ரகுமான் அறக்கட்டளைக்கு நேரடியாக செலுத்துமாறு மொபைல் நிறுவனத்திடம் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாக தெரிகிறது.

இதன்மூலம் ஏ.ஆர்.ரகுமான் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கூறி வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் சார்பில் கொடுத்த விளக்கத்தை ஏற்று விசாரணையை கைவிடுமாறு முதன்மை ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பவானி மற்றும் சுப்பராயன் ஆகிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஏ ஆர் ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.