பால் வாங்க சென்ற மணப்பெண் மாயம்..நடந்தது என்ன ???

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு தந்தையே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது.

தேனியின் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை சேர்ந்தவர் ஜெயபால் – செல்வி தம்பதியர், இவர்களது மகள் கீர்த்தனா.

பெங்களூருவில் வேலை பார்த்து வரும் ஜெயபால், மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலேயே மகளுக்கு வரன் பார்த்த ஜெயபால் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளார்.

மேலும் கடந்த புதன்கிழமை அன்று திருமணம் நடைபெறுவதாக உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் கிளம்பிய கீர்த்தனா வீடு திரும்பவில்லை.

வெகுநேரமாக வரவில்லை என தெரிந்த குடும்பத்தார், அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது அவர்களுக்கு தங்களுடைய மகள் வேறு ஒரு பையனுடன் சென்று விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததன் அடிப்படையில், கீர்த்தனாவையும் கீர்த்தனாவை அழைத்துச் சென்றவரையும் அழைத்து போலீசார் விசாரிக்கும்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால் தனது மகள் இறந்து விட்டதாக கூறி, தனது சொந்த ஊரிலேயே போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது.