மறந்தும்கூட இந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டாம்

ஒவ்வொரு தெய்வத்தை வழிபடும் போதும் மனமுறுகி விளக்கேற்றி வழிபட வேண்டும், ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் விஷேசமானதாக இருக்கும்.

தீபமேற்றும் போது அவ்வீட்டு பெண்கள் மெட்டி, குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது, ஆண்கள் தீபமேற்றக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதே வேளையில் இந்த எண்ணெயை மட்டும் விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாதாம், அது ஏன் என தெரிந்து கொள்வோம்.

தீபமேற்றுவது எப்படி?

சுத்தமான பஞ்சை பன்னீரில் நனைத்து காய வைத்து திரியாக்கி இரண்டு திரிகளாக முறுக்கி தீபமேற்றி வழிபட வேண்டும்.

தீராத கடன் சுமையால் அவதிப்படுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், சதா சண்டை, சச்சரவுகளுடன் இருக்கும் தம்பதிகள், விளக்கில் சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றினால் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது.

வீட்டில் அல்லது தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் ஸ்தலங்களில் தீய சக்திகள் இருப்பதாக உணர்ந்தால் உடனே விளக்கில் வெள்ளை எருக்கன் திரி போட்டு தீபம் ஏற்றி பாருங்கள்.

மஞ்சள் திரியினால் அம்மனுக்கும், தாமரைத் தண்டு திரியினால் மகாலட்சுமிக்கும் தீபமேற்றி வழிபட சகல சம்பத்துகளும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.

குல தெய்வ சாபம் இருப்பவர்கள் வாழைத் தண்டு திரியினால் தீபமேற்றி வழிபட சாபம் நீங்கும் என்பது ஐதீகம்.

தெய்வ குற்றங்கள் இருந்தால் வெள்ளை வஸ்திரத்தை பன்னீரில் நனைத்து திரியாக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

எந்த எண்ணெயில் தீபமேற்றக்கூடாது?

கடலை எண்ணெயில் மட்டும் தீபமேற்ற கூடாது. அது மிகப்பெரிய பாவமாக சாஸ்திரம் எடுத்துரைக்கிறது.

கடலை எண்ணெயில் தீபம் ஏற்றினால் அதிர்ஷ்டம் உங்களை விட்டு நீங்கி விடுமாம். மேலும் இதனால் குலம் தழைப்பதில் பிரச்சனைகள் வருமாம்.

அதனால் தான் கடலை எண்ணெயில் தீபம் ஏற்றக் கூடாது என்கிறார்கள்.