வயதுக்கு மீறி 38 வயதில் அப்படிபட்ட காட்சிகளில் பிரபல நடிகை..

90களில் முன்னணி நடிகையாக தமிழ், இந்தி என மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரீமா சென். திருமணமான பிறகும் படுக்கையறைக் காட்சியில் நடித்ததால் நடிகை ரீமா சென் மீது செம கடுப்பில் இருக்கிறார் அவரது கணவர் ஷிவ் கரண்.

படங்களில் நடித்து வந்த ரீமா சென் கடந்த 2012ல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்கை 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார்.

இவர் நடிப்பில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தில் ரீமாசென் படுக்கை அறை காட்சியொன்றில் மிகவும் மோசமாக நடித்திருந்தார்.

எப்போது சாதாரணமாக நடித்து வந்த ரீமா சென் மோசமாக நடித்ததை பார்த்த கணவர் ஷிவ் கரண் சிங் பார்த்து தலையிலடித்துக் கொண்டாராம்.

இப்படத்தின் காட்சியை அவரது குடும்பத்தினரும் உறவினர்களோடு போய் மருமகளின் ‘சீனைப்’ பார்த்து அவமானப்பட்டுள்ளனர். இதனால் ரீமாசென்-ஷிவ் கரண் சிங் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

கவர்ச்சியாக இனி மேல் நடிக்கக் கூடாது என்று ரீமாசென்னுக்கு கணவர் தடை விதித்துள்ளாராம். இதனை ரீமாவும் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இது குறித்துக் கூறும்போது, “கேங்க்ஸ் ஆப் வசேபூர்” படத்தை எனது கணவர் பார்த்தார். அப்படத்தில் நான் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது அவருக்கு பிடிக்கவில்லை.

அவர் மனம் புண்பட்டுள்ளார். நான் படத்திற்கு தேவை என்பதால் தான் அந்த படத்தில் சில படுக்கையறை காட்சிகளில் நடித்தேன்.

ஆனால, படம் முழுவதும் அந்த காட்சிகள் இருப்பது போல விளம்பரம் செய்து விட்டார். இதனை வீட்டில் புரிய வைத்துள்ளேன். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.