அது வதந்தியே… அப்பா இன்னும் செயற்கை சுவாச உதவியில்தான் இருக்கிறார்! எஸ்.பி.பியின் தற்போதைய நிலை…

செயற்கை சுவாசத்துக்கான வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட வில்லை. அப்பா இன்னும் செயற்கை சுவாச உதவியுடன் தான் இருக்கிறார் என்று மகன் எஸ்.பி.சரண் காணொளி வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது,

 

View this post on Instagram

 

#spb health update 18/8/2020

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on


“அப்பாவின் உடல்நிலை நேற்று இருந்தது போலத்தான் இருக்கிறது. செயற்கை சுவாசத்துக்கான வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்டதாக ஒரு செய்தி உலவுகிறது. அது வதந்தியே. அவர் விரைவில் அதன் உதவி இல்லாமல் சுவாசிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உங்கள் பிரார்த்தனைகள் வேலை செய்கின்றன என்பதை நாங்கள் நம்புகிறோம். அது நாங்களும் அவரும் மீள உதவுகிறது. தொடர்ந்து பிரார்த்தியுங்கள் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.