கீர்த்தி சுரேஷ் கொடுக்கப்போகும் மிரட்டலான ஸ்பெஷல்!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் பெண்குயின் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ரசிகர்களிடமும் முழுமையான ஈர்ப்பை பெறவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவர் நடித்து வந்த அண்ணாத்த படம் தற்போது கொரோனா, ஊரங்கால் படப்பிடிப்பு வேலைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வரும் அவர் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் குட்லக் சகி. நாகேஷ் குக்குனூர் இப்படத்தை இயக்க தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் டீசர் நாளை சுதந்திர தின ஸ்பெஷலாக காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாம்,

இப்படத்தில் கீர்த்தி துப்பாக்கி சூடு வீராங்கனையாக நடித்துள்ளாராம்.