வன்புணர்வுக்கு ஆளாகிய 14 வயது சிறுமி தனக்கு பிறந்த குழந்தையினை அனாதை இல்லத்திற்கு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு பூங்காவில் தன் நண்பர்களுடன் 13 வயது சிறுமியும் விளையாடிக் ண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் குளிர்பானத்தை குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மயக்கமடைந்த சிறுமியை அவருக்கே தெரியாமல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர். மயக்கம் தெளிந்த சிறுமி என்ன நடந்தது என்றே தெரியாமல் தனது ஆடையில் இருந்த கறையை பற்றி பெற்றோரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.
பின்பு சில மாதங்களுக்கு பின்பு சிறுமி கர்ப்பமானதைக் கண்டுபிடித்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டவர்களை அடையாளம் காணமுடியவில்லை.
தற்போது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் இதனை அவரது பெற்றோர்கள் சமூக காரணங்களைக் கூறி பராமரிக்க மறுத்ததால் அனாதை இல்லத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இப்பொழுது வெளியே தெரிந்துள்ள இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது