கொரோனா யாரும் இவ்வருடம் எதிர்பாராத ஒரு கொடிய நிகழ்வு. மக்களின் தொழில், பொருளாதாரத்தை முடக்கியதோடு, பல லட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கிவிட்டது.
20 கோடிக்கும் அதிகமான மக்களை பாதிக்கச்செய்துவிட்டது. இந்தியாவில் அண்மையில் கேரளாவன் கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்த விபத்து, இடுக்கி மூணாறு மண்சரிவு என உயிர் இழந்தவர்கள் பலர்.
இச்சம்பவம் குறித்து நாடு முழுக்க பலரும் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர். மலையாள சினிமாவை சேர்ந்தவர்கள் பலர் இது தங்கள் இரங்கலை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமும், காமெடி நடிகையுமான மதுமிதா தன் சோகத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
நாம் நம் உறவுகளை மண்ணில் புதைப்பதைவிட,
மண்ணே நம் உறவுகளை புதைத்துவிடுவது கொடூர வலி நிறைந்தது.
உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த மனிதர்களின் பாதுகாப்பைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய நேரம் இது. ?? pic.twitter.com/CWUkwRocdN
— Actor Madhumitha (@ActorMadhumitha) August 9, 2020







