தம்பதியினருக்கு இடையில் தொடர் சண்டையா? அதை தீர்க்க என்ன வழி!

கணவன் மனைவி சண்டை என்பது எப்பொழுது தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஈகோ பிரச்சனையால் பிரியும் கணவன் மனைவி தம்பதியர்கள் அதிகம் என்று சொல்லிவிடலாம்‌.

அந்த அளவிற்கு டைவர்ஸ் கேஸ் வரிசையில் நிற்கிறது. ஆன்மீக ரீதியாக இதற்கு ஏதாவது சுலபமான பரிகாரம் உண்டா என்று தீர்வு தேடுபவர்களுக்காகவே, இந்த பதிவு.

முதலில் ஒரு வெற்றிலையில் கணவரின் பெயரை எழுதி விடுங்கள். மற்றொரு வெற்றிலையில், மனைவியின் பெயரை எழுதி விடுங்கள். ஒரு பேனாவினால் எழுதுங்கள். அதன்பின், நீங்கள் எடுத்து வைத்திருக்கும் நெய்யை உங்கள் விரலில் தொட்டு, அந்த வெற்றிலை முழுவதிலும் தேய்த்து விடுங்கள். பெயர் கொஞ்சமாக அழிந்தாலும் பரவாயில்லை.

இப்போது ஒரு வெற்றிலையின் மேல் மற்றொரு வெற்றிலையை வைத்து சுருட்டி விடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும், ஒரு வெற்றிலையின் மேல் சாஸ்திரப்படி, மற்றொரு வெற்றிலையை கவிழ்த்து வைக்க கூடாது.

எப்போதும் சாமி கும்பிடும்போது வைப்போம் அல்லவா? ஒரு வெற்றிலைக்கு மேலே மற்றொரு வெற்றிலை, அப்படி வைத்து சுருட்டி, ஒரு கயிறால் அந்த வெற்றியை கட்டி விட வேண்டும். வெற்றிலை பிரியாத அளவிற்கு கட்டிவிடுங்கள்.

இப்போது, இதை காற்று புகாத டப்பாவில் போட்டு, அப்படியே மூடி வைத்துவிடுங்கள். 21 நாட்கள் அப்படியே இருக்கட்டும். 21 நாட்களுக்குள் இடையே டப்பாவை திருக்க வேண்டாம். கட்டாயம் விரிசல் விழுந்த கணவன் மனைவி மனதிற்குள், நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தாலே பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஒருமுறை செய்தும் பலன் இல்லையா? பழைய வெற்றிலையை, கால் படாமல் தூர போட்டுவிட்டு, மீண்டும் புதிதாக வெற்றிலையை எடுத்து, இதேபோல் பரிகாரத்தை செய்து டப்பாவில் போட்டு மூடி வையுங்கள்.

அதிகபட்சம் 3 முறை இந்த பரிகாரத்தை செய்தால், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.