கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நாடு முழுக்க அமல்படுத்தப்பட்டது. சீரியல், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின் சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது.
இந்நிலையில் சின்னத்திரை சீரியல்களில் பல சூழ்நிலைகளால் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் சில நடிகைகள் மாற்றம் பலரும் ஷாக்கிங்.
இந்நிலையில் இரட்டை ரோஜா படத்தில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் இரட்டை வேடங்களில் நடித்து வந்தார்.
கடந்த ஜூலை 27 ம் தேதி படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கின. நேற்று முதல் இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பானது.
ஷிவானி இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக மன்னர் வகையறா, சித்து பிளஸ் 2, கவண் படங்களில் நடித்து வந்த நடிகை சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார்.
சாந்தினி தாழம்பு என்ற சீரியலிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
சாந்தினியோட வருகைக்கு எத்தனை பேர் waiting? Rettai Roja #RettaiRoja #ZeeTamil