பிரபல டிவி சீரியல், சினிமா நடிகை தற்கொலை! இறப்பதற்கு முன் கடைசியாக செய்தது!

கொரோனாவால் திரையுலகம் முற்றிலும் முடங்கியுள்ளது. சினிமாவுக்கு இணையாக நல்ல வரவேற்பை நீண்டகாலமாக பெற்று வரும் சின்னத்திரையும் நஷ்டத்தை தந்துள்ளது.

சின்னத்திரையை நம்பி பிழைப்பு நடத்தும் பலர் இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது தொழில்நுட்ப கலைஞர்களும் வறுமைக்கும், மன அழுத்தத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

அண்மையில் பாலிவுட் சீரியல், சினிமாவை சேர்ந்த சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில் போஜ்புரி படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்து வந்த அனுபமா பதக் கடந்த 2 ம் தேதி மும்பையில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த விசாரணையில் பீகாரை பூர்வீகமாக கொண்ட அவர் தற்கொலைக்கு முன் விரக்தி மனநிலையோடு பேஸ்புக்கில் ரசிகர்களுடன் உறையாடிள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், யாரையும் நம்பமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் அனுமபா கடைசியாக எழுதிய கடிதத்தையும் கைப்பற்றியதுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.