யாழில் சுமந்திரனுக்கு எதிராக பொங்கியெழுந்துள்ள இளைஞர்கள்!

யாழ்ப்பாண மாவட்ட வாக்கெண்ணும் நிலையமாக உள்ள யாழ்.மத்திய கல்லூரி முன்பாக தற்போது சுமந்திரனுக்கு எதிராக இளைஞர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமந்திரன் மத்திய கல்லூரிக்கு வந்து சென்ற வேளை இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

அதேவேளை சசிகலா ரவிராஜ் அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.