இந்த பூக்களை எல்லாம் தலையில் வைக்கலாமா.?!

* அதிக மகசூலும், லாபமும் தரக்கூடிய பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அந்த பூக்கள் பலவும் மருத்துவ குணம் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

* உலகில், 25 சதவீத மலர்களானது மருத்துவ குணம் கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

* பெண்கள் தலையில் பூச்சூடுவதால் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. மேலும் உடல்நலத்துக்கு நன்மை பயக்கிறது.

* பூக்களில் ஒன்றான ரோஜாப்பூ, தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றை குணப்படுத்தும்.

* மல்லிகைப்பூ மன அமைதிக்கு உதவும் மற்றும் கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

* செண்பகப்பூ வாதத்தை குணப்படுத்தும், பார்வைத்திறனை மேம்படுத்தும்.

* பாதிரிப்பூ செவி கோளாறுகளை சீர்படுத்தும், செரிமான சக்தியை மேம்படுத்தும், காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றை சரிசெய்யும்.

* செம்பருத்திப் பூ தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யும், உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

* மகிழம் பூ தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட குறைபாடுகளை நீக்கும்.

* வில்வப்பூ சுவாசத்தை சீராக்கும். காசநோயை குணப்படுத்தும்.

* சித்தகத்திப்பூ தலைவலியைப் போக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

* தாழம்பூ நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

* தாமரைப்பூ தலை எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரிசெய்யும், மன உளைச்சலை நீக்கி அமைதி கொடுக்கும், தூக்கமின்மையைப் போக்கி, சீரான தூக்கத்தை அளிக்கும்.

* கனகாம்பரம் பூ தலைவலி மற்றும் தலை பாரத்தை சரிசெய்யும்.

* தாழம்பூ, மகிழம் பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ, செண்பகப்பூ போன்ற மலர்கள் வாதம், கபம் போன்றவற்றை சரிசெய்யும்.