பிரபல நடிகையின் பங்களாவை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்!

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 1.28 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சமாக கூடியுள்ளது.

அண்மையில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகையும், காதல் மன்னன் ஜெமினி கணேசன் மகளுமாக ரேகாவின் வீட்டில் பாதுகாவலர்கள் இருவரின் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பங்களா மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு நோட்டிஸ் ஒட்டுப்பட்டுள்ளதாம்.

நடிகர்கள் அமீர் கான், போனி கபூர், கரண் ஜோஷர் ஆகியோரின் செக்யூரிட்டிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.