அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கும் யாஷிகா.!

தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல், சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.

சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.


இந்த நிலையில், சமீபத்திய தனது புகைப்படங்களில் யாஷிகா ப்ரைடல் லுக்கில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும்.. கவர்ச்சியை விட இந்த லுக் வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.