நடிகை ஆண்ட்ரியாவிற்காக அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்.. ஏன்?

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புதிய போட்டோ ஷூட் பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிம்பிளாக இருக்கும் செம அழகான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு கமெண்ட்ஸ் செய்துள்ள பெரும்பாலானோர் “ஐ லவ் யூ ஆண்ட்ரியா”… “ப்ளீஸ் Marry மீ மேடம்” என்றெல்லாம் ஆளாளுக்கு போட்டிபோட்டுக்கொண்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

??

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on