கையில் குழந்தையுடன் நடிகை நயன்தாரா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்.!!

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என்று அவர்களது சார்பில் நிதி அளித்து வருகிறார்கள்.

தற்போது நடிகை நயன்தாரா அவரது வீட்டில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.ஊரடங்கு உத்தரவால் எவ்வித படப்பிடிப்புகளும் நடக்காமல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் வீட்டில் போரடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்பதை வீடியோக்களாக பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருக்கிறார். மேலும், எதிர்காலத்தில் வரும் என் குழந்தைகளின் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.