மனம் கவர்ந்த நாயகன் குறித்த தகவல் கூறிய நந்திதா..!!

தமிழ் திரையுலகில் அட்டகத்தி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆன நடிகை நந்திதா சுவேதா. இவரது கைவசதி தற்போது “ஐ.பி.சி.376, வணங்காமுடி, கபடதாரி” ஆகிய திரைப்படங்கள் உள்ளது.

இந்த மூன்று திரைப்படங்களும் அடுத்தடுத்து படத்திற்கு வரவுள்ள நிலையில், வணங்காமுடி திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ள நிலையில், இவரது தலைமையில் பணியாற்றும் காவல் அதிகாரியாக நந்திதா நடித்துள்ளார்.

இப்பட அனுபவம் குறித்து நந்திதா கூறிய சமயத்தில், எனது மனம் கவர்ந்த நாயகன் அரவிந்தசாமி. இவருடன் நடிக்க வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்த நிலையில், வணங்காமுடி திரைப்படத்தின் மூலம் நனவாகியுள்ளது. எந்த விதமான பந்தாவும் இல்லாமல், நடிப்பு, உடல் ஆரோக்கியம் குறித்து அதிகளவு ஆலோசனைகளை கூறினார்.

ஒரு படத்தை பொறுத்த வரையில் இரண்டு நாயகிகள் இருந்தால் போட்டி மற்றும் பொறாமை இருக்கும். இந்த படத்தில் நான், சிம்ரன், ரித்திகா சிங், சாந்தினி ஆகிய நான்கு பேர் நடத்துள்ளோம். எங்களுக்குள் எந்தவிதமான போட்டியும் இல்லை. எங்களின் கருத்துக்களை மனம் திறந்து பரிமாறிக்கொண்டோம் என்று தெரிவித்தார்.