மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும் அளவு அதிகரிப்பு

தற்போதைய லொக்டவுன் நிலைமை காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள் இணையத்தினை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இந்த எண்ணிக்கையானது 38 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இவர்களில் அனேகமானவர்கள் 15 வயது அல்லது அதிலும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொக்டவுன் காலத்தில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஒன்லைன் மூலமாக வழங்கப்படும் பாடநெறிகளில் கலந்துகொள்வதற்கே அதிகமான மாணவர்கள் இணையத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதுமாத்திரமன்றி பொழுபோக்கு அம்சங்களுக்காகவும் இணையம் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

இவை தவிர ஒன்லைன் பணப்பரிமாற்றம், மின்வணிகம், மின் மருத்துவம் போன்றவற்றினாலும் இணையப்பாவனை வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.