ஒரே ஒரு வார்தையால் மிரட்டிய மனைவி… ஆத்திரத்தில் மூக்கைக் கடித்து துப்பிய கணவர்! நடந்தது என்ன ?

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முதியா கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி தேவி (34). இவரது கணவர் மூல்சந்த். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 6 மாதகாலமாக சரோஜினி தேவி தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கிராம பஞ்சாயத்தினர் இருவரையும் சமாதனப்படுத்தி சேர்ந்து வாழ அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரோஜினி தேவி ‘நான் மறுபடியும் பெற்றொர் வீட்டுக்கு போய்விடுவேன்’ என மிரட்டியுள்ளார்.

இதனால் கோபமான மூல்சந்த் தனது மனைவின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். இதில் காயமடைந்த சரோஜினி தேவி அலறித்துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சரோஜினி தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கணவர் மூல்சந்த் மீது பொலிசார் வழக்கும் பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.