பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளம் ஆசாமி! பாதிக்கப்பட்ட நடிகரின் மகள்!

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அவ்வப்போது சமூகத்தில் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. தற்போது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. 26 வயதான இவர் சென்னையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டது சொந்த ஊரில் கோழிக்கடை நடத்தி வரும் தன்னுடைய அப்பாவின் தொழிலை கவனித்து வந்தாராம்.

கல்லூரி படிக்கும் போதே சமூக வலைதளம் மூலம் பள்ளி, கல்லூரி என பல பெண்களுடன் பழகி நெருக்கமாக எடுத்துகொண்ட புகைப்படத்தையும், ஆபாச வீடியோவையும் இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி பலரையும் மிரட்டி நகை, பணத்தை பறித்துள்ளார்.

அவரால் பாதிக்கப்பட்ட டாக்டர் பெண் ஒருவர் கொடுத்த புகார் மற்றும் 2 பேர் என துணிச்சலாக கொடுத்த புகார் அடிப்படையில் போலிசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் விசாரணையில் உள்ளூர், வெளியூர் என குறிவைத்து வசதியான குடும்பத்து பெண்களை மடக்கி தன் காம வலையில் சிக்கவைத்து பணம் பறித்து சொந்தமாக 4 மாடி வீட்டை கட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் காசியால் நடிகரின் மகள் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே பாடகி சின்மயியிடம் காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளதாகவும், தான் இது குறித்து பதிவிட்டுள்ளதாகவும் சின்மயி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.