7ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்த தொகுப்பாளினி பிரியங்கா!! டிவிக்கு வரவில்லை என்றால் என்ன தொழில் செய்திருப்பார்..!!

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால் நிச்சயம் ஏர் ஹோஸ்டர் ஆகியிருப்பாராம்.

பிரபல டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக பிரியங்கா இருந்து வருகிறார்.

கர்நாடகாவைச் சேர்ந்த பிரியங்கா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர்.

சின்ன வயதிலிருந்தே டிவி துறை பிடிக்கும் என்பதால், அதிலேயே கவனத்தை செலுத்தியிருக்கிறார்.“சூப்பர் சிங்கர் 5” ரியாலிட்டி நிகழ்ச்சியின் உதவி இயக்குநர் பிரவீனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்துள்ளார்.

இதனால், அப்போதே பொறுப்பானவராக மாறியிருக்கிறார். தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால், நிச்சயம் ஏர் ஹோஸ்டர் ஆகியிருப்பாராம். அவரை பல தடவைகள் நேர்காணலில் கூறியிருக்கினார்.

இதேவேளை, பிரியங்காவுக்கு பயணமும், தென்னிந்திய உணவுகளும் மிகவும் பிடித்தமானவைகளாம்.