கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டுள்ளது. இதனால், சிறுகுறு தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் கூலித் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து உண்ண உணவு கூட இல்லாமல் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி போன்ற படங்களில் கொடூர வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சோனு சூட் மும்பையில் தினமும் உணவின்றி தவித்துவரும் ஏழை மக்கள் 45 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.
இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களும், நர்சுகளும், தொண்டு நிறுவனத்தினரும் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் நானும், என்னால் ஆன உதவிகளை செய்வதில் பெருமை அடைகிறேன்’ என்றார். அவரது சேவையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.