மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் சீனா!

கொரோனா வைரஸின் வேகம் நினைத்ததை விட அதிகமாக பரவி வருகிறது.

உலகிலேயே கொரோனாவால் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளான நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற்றுள்ளது.

முதல் முதலில் சீனாவில் தான் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது.

சீனாவில் இரண்டாவது நாளாக நேற்று யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை. சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது.
சீனாவில் 77,078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1299 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.