இன்று பல புதிய நோய்கள் உருவெடுத்து நம்மை வாட்டி வதைத்து கொண்டுள்ளது.
அதற்கு முக்கிய காரணமே சுகாதாரயின்மையும், நோய் எதிர்ப்புசக்தி இன்மையும் தான்.
நாம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தால் எந்த நோய்யும் நம்மை அண்டாது என நம் பெரியோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு.
இதன் அடிப்டையில் நோய் வரும் முன் காப்பதுதான் புத்திசாலித்தனம். அந்தவகையில் இதற்கு இயற்கை மருத்துவத்தில் பல வழிகள் உள்ளது. அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
- தினமும் உங்கள் வீட்டை கிருமிநாசினி கலந்த தண்ணீரால் துடைப்பது சிறந்தது.
- வீட்டின் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருங்கள். மஞ்சள் தூள் கலந்த தண்ணீர் அல்லது வேப்பிலைகள் ஊறப்போட்ட தண்ணீரை வீட்டு வாசலிலும் வீட்டைச் சுற்றிலும் தினமும் மறக்கமால் தெளியுங்கள்.
- புறச்சுத்தம் போல குடல் பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய நீர்க்காய்கறிகள், கஞ்சி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- தினமும் காலை அல்லது மாலை 20 நிமிடங்கள் வரை சூரிய ஒளியின் கீழ் நில்லுங்கள். இது நோய் எதிர்ப்பு சக்தி தருவதோடு நம் உடலுக்கான கிருமிநாசி மற்றும் ஆன்டி வைரஸாகவும் செயற்படும்.
- துளசி, புதினா, கற்பூரவள்ளி இலைகள், நொச்சியிலை, ஆடாதொடா இலை இவற்றில் ஏதாவது ஒன்றை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள். அல்லது மஞ்சள் தூள், கல் உப்பைப் போட்டுக்கூட ஆவி பிடிக்கலாம். வாயை நன்கு திறந்து, அழமாக சுவாசித்தபடி ஆவி பிடியுங்கள். தொண்டை மற்றும் சுவாசப் பாதையில் இருக்கின்ற அத்தனை கிருமிகளும் அழியும்.
- தினமும் பல் துலக்கியவுடன், கல் உப்பு போட்ட மிதமான சூடுள்ள வெந்நீரை தொண்டையில்படும் படி ஊற்றிக் கொப்பளித்தாலும் தொண்டையிலிருக்கின்ற கிருமிகள் அழியும்.
- சமையலில் தாளிக்கப் பயன்படுத்துகின்ற பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ ஆகியவை ஆன்டி வைரஸ் தன்மை கொண்டவை. சமையலில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது குடிநீரில் போட்டும் குடிக்கலாம்.
- வைட்டமின்களும் தாது உப்புகளும் பசலைக்கீரையில் அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், நீரழிவு இருப்பவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பசலைக்கீரை அதிகரிக்கும் என்பதால், அடிக்கடி சாப்பிடலாம்.
- கால் டிஸ்பூன் மஞ்சள் தூள், தலா 50 மில்லி இஞ்சிச்சாறு, துளசிச்சாறு ஆகியவற்றை 300 மில்லி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இந்த கலவை ஆறியதும் இதனுடன் 50 மில்லி பெரிய நெல்லிசாறு, 5 மில்லி எலுமிச்சை சாறு, சுவைக்கு தேன், மிளகுத்தூள் சேர்த்துப் பருகலாம். பெரியவர்கள் என்றால் 250 மில்லி, வளர்ந்த பிள்ளைகள் என்றால் 100 மில்லி பருகலாம். சாப்பிட்ட பிறகு பருக வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- மாலையில் காபி, டீக்கு பதிலாக மூலிகை சூப் அருந்தலாம். கால் டிஸ்பூன் மிளகுத்தூள் , மஞ்சள் தூள், 50 மில்லி இஞ்சி சாறு, 2 பூண்டு, துளசி, புதினா ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து கல் உப்பு சேர்த்து அருந்தலாம்.