இந்திய சினிமாவில் தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபலமானவர்கள் தான் தமிழ் சினிமாவில் கமிட்டாகி நடிப்பார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகையாக அறிமுகமாகி பின் தமிழ் படங்களான கேடி, நண்பன் ஆகிய படங்கள் மூலம் முன்னணி நடிகையாக வளம் வந்தார் நடிகை இலியானா.
தற்போது முன்னணி நடிகையாக பாலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து பின் தோல்வியால் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார்.
அதன்பின் மீண்டும் பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துள்ளார். கொரானா வைரஸால் ஊரடங்கால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நடிகை இலியானாவின் மாமா இறந்துள்ளதாக வீடியோவுடன் உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில் நீங்கள் இறந்துள்ளதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை எனக்கு அதிகம் பிடிக்கும். இது கனவாக இருக்கக்கூடாதா! என்றும், நாளை எந்திரிக்கும் போது இது கனவாக இருக்கக்கூடாதா என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.
இதை பார்த்த அவரது ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் ஆறுதலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.