தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.!

சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 75 வயதான முதியவர் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக கடந்த 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருக்கு மேற்கொண்ட சோதனையில் கொரோனா தோற்று உறுதியானதை அடுத்து இவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தின் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏற்கனவே மதுரையைச் சார்ந்த நபர், தேனியை சேர்ந்த நபர், விழுப்புரத்தை சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது