காதலியை கொலை செய்த காதலன்.!! காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸ்..!!

என் காதலி எனக்கு கொரோனாவைக் கொடுத்துவிட்டாள், அதனால் அவளைக் கொன்றுவிட்டேன் என்று கூறி பொலிசாரை அழைத்துள்ளார் ஒருவர்.

இத்தாலி மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றிவந்தவர் Lorena Quaranta (27). அவரது காதலர் Antonio De Pace (28).

பொலிசாரை தொலைபேசியில் அழைத்த Antonio, தான் தனது காதலியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பொலிசார் விரைந்து வர, வீட்டில் Lorena சடலமாக கிடந்த நிலையில், Antonio மணிக்கட்டுகளை அறுத்துக்கொண்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு மருத்துவ உதவியை அழைத்துள்ளனர் பொலிசார்.

மருத்துவமனையில் Lorenaவின் சக மருத்துவர்களே போராடி Antonioவைக் காப்பாற்றியுள்ளனர்.

ஏன் Lorenaவைக் கொன்றாய் என்று கேட்டபோது, அவள் எனக்கு கொரோனா தொற்றைக் கொடுத்துவிட்டாள், அதனால்தான் அவளைக் கொன்றுவிட்டேன் என்று கூறியுள்ளார் Antonio.

ஆனால் மருத்துவப்பரிசோதனையில், Antonioவுக்கோ உயிரிழந்த அவரது காதலி Lorenaவுக்கோ கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.