யாழ் செம்மணி – இளையதம்பி வீதியில் கொரோனாவிலிருந்து தப்பிக்க ஜெப ஆராதனை நடத்தியவருக்கும் கொரொனா: கலந்து கொண்டவர்களை தனிமைப்பட அறிவித்தல்!

யாழ் செம்மணி – இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதுபோதையில் கலந்துகொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்துமாறு! கொரொனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் தம்மை பரிசோதைக்கு உட்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி தா.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர் கடந்த 15ம் திகதி சுவிஸ் இருந்து வந்த மதபோதகர் ஒருவர் மதபோதனை நடத்தியிருந்தார்.

இந்த போதனை நடத்திய போதகர் சுவிஸ் நாட்டிற்கு சென்ற நிலையில் அவர் அங்கு கொரொனா நோயாளியாக இனம்காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது இந்நிலையில் மதபோதனையில் கலந்துகொண்டவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உற்ப்படுத்துமாறும் மற்றும் சந்தேகம் இருப்பின் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசோதைக்குட்ப்படுத்துமாறும் கேட்டுள்ளனர்!

இதேவேளை குறித்த மதபோதகருடன் நெருக்கமாக பழகிய ஒருவருக்கு கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் இந்த விடயம் அரியாலையில் உள்ள மருத்துவர் ஒருவர் ஊடாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி தா.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் நல்லூர் பிரதேச மருத்துவ அதிகாரி ஜெயக்குமார் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு அதிகாரி மருத்துவர் மோகனகுமார்.

மற்றும் சுகாதார பரிசோதகர் போலீசார் என அதிகாரிகள் குழாம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியிருப்பதுடன் முதற்கட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டனர். மேலும் குறித்த நபர் அவருடைய வீட்டிலேயே கட்டயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்படவுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தாரும் கண்காணிக்கப்படுகிறார்கள்.

பின் இணைப்பு-

ஆராத னை நிகழ்வில் கலந்து கொண்டவா்கள் உடனடியாக தங்கள் பெயா்இ முகவரியை பதிவு செய்யுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில் வெளிநாட்டிலிருந்த வந்த மதபோதகா் ஒருவாினால் நடத்தப்பட்ட ஆராத னையில் கலந்து கொண்ட இருவா் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். இந்த ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள்இ

மாவட்டங்களை சோ்ந்தவா்கள் என பலா் கலந்து கொண்டுள்ளனா். இவா்கள் உடனடியாக தமது பெயா் மற்றும் இரு ப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற முகவாிக்கு உடனடியாக அறியத்தரவும் என அவா் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றாா்.