இரண்டு செய்தி சேனலுக்கு தடை விதித்த விவகாரம் தொடர்பில் திடீர் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு.!

மீடியாஒன் மற்றும் ஏசியானெட் ஆகிய இரண்டு கேரள தொலைக்காட்சி சேனல்களுக்கு 48 மணி நேரத்திற்கு ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டக்காரர்கள் இடையே கடந்தவாரம் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 50 தாண்டியுள்ளது. கேரளாவில் ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் ஆகிய இரு பிரபல செய்தி சேனல்கள், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து ஒருதலைபட்சமாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் பக்கபலமாகவும் செய்தியை வெளியிட்டு டெல்லியில் மேலும் வன்முறையை தூண்டும் விதமாகவும் செய்தி ஒளிபரப்பியதால் வெள்ளிக்கிழமை 7.30 மணி முதல் மார்ச் 8ம் தேதி இரவு 07.30 மணி வரையிலான 48 மணி நேரம் சேனல் ஒளபரப்பிற்கு தடை விதித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் இரண்டு சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஏசியாநெட் வீடியோ ஒன்று மீதான 48 மணிநேர தடை நீக்கியது மத்திய அரசு. டெல்லி வன்முறை பற்றிய ஒருதலைபட்சமாக செய்தி வெளியிட்டதற்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கியுள்ளது மத்திய அரசு.