டுபாயில் இருந்து இலங்கை வந்த தம்பதி விமானநிலையத்தில் கைது!

டுபாயில் இருந்து சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்டுக்களை இலங்கைக்கு கடத்த முயன்ற தம்பதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவரும் இந்திய பிரஜையான அவரது (வயது 42) மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதாவவர்களிடமிருந்து , 24,20,000 (24 மில்லியன்) மதிப்புள்ள 48,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 242 சிகரெட் பெட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் தலா ரூபா.200,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.