நான் இந்த நடிகரை தான் திருமணம் செய்வேன் – நடிகை ராஷ்மிகா….

தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாகக் திகழ்பவர் நடிகை ராஷ்மிகா. இவர் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் தமிழில் நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடிகை ராஷ்மிகாவிடம் எந்த நடிகர்கள் உங்களுக்கு நண்பன், காதலன் மற்றும் கணவராக வர வேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் ‘நடிகர் நிதின் எனக்கு நண்பராக இருப்பார் என்றும் நடிகர் விஜய் எனக்கு பாய் ஃப்ரண்டாக இருப்பார் என்று கூறியுள்ளார். எந்த நடிகர் கணவராக வர வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

மேலும் தான் ஒரு தமிழ் நடிகரை திருமணம் செய்ய விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.