நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் அரிசிமூட்டைகளுடன் சென்ற லொறி விபத்து..

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் எனவும் குறித்த லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை குறித்த லொறியின் இருந்த 7000 கிலோ அரிசி பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டதுடன், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.