என்னையும் என் தாயையும் சீமான் இப்படி செய்தார் வீடியோ வெளியிட்டு சர்ச்சை கிளப்பிய நடிகை

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடவுள் மறுப்பு கொள்கையாளராக இருந்தவர். தற்போது சிவ பக்தராக மாறி இருப்பது குறித்து நடிகை விஜயலட்சுமி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கின்றது.

கடவுள் மறுப்புக் கொள்கையைப் பரப்பி வந்த பொழுது சீமான் சிவனை விமர்சித்து பேசியிருந்தார். தற்பொழுது அது அவருக்கே சிக்கலாக மாறி இருக்கின்றது. சமீபத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்று சிவலிங்கத்தை வழிபட்டு வந்தார்.

இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு, தற்பொழுது கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த வீடியோவில், “வாழ்த்துக்கள் படத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையை கடைப்பிடித்த சீமான், திருநீர் பட்டை பூசியதற்காக தன்னையும், தன்னுடைய தாயையும் கேலி செய்ததாக அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அவர் பெற்ற மகன் மீது சத்தியம் செய்து விஜயலட்சுமியை தெரியாது என்று அவரால் சத்தியம் செய்ய முடியுமா.? என்று அவர் சவால் விடுத்து இருக்கிறார். இந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

https://www.facebook.com/watch/?v=599382783957125