எதிர்வரும் காலங்களில் ஓய்வு பெறுகிறார் கரு ஜயசூரிய!

எதிர்வரும் காலங்களில் தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறி அழைப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும்படி சபாநாயகர் கரு ஜயசூரிய மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை பகல் அஸ்கிரிய மற்றும் மல்வதுப்பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார்.

கடந்த 05 வருடங்களில் தாம் ஒருபோதும் புதிய வாகனம் கேட்கவில்லை என்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் வாகனத்தையே தாம் பாவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜனநாயகத்தை உறுதி செய்த சந்தோஷத்தில் தாம் சபாநாயகர் பதவியில் இருந்து விடை பெறுவதாகவும் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.