பொன்னாங்கண்ணி கீரையின் மகத்துவம் என்னென்று தெரியுமா ?

உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இப்பெயர். கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி. பலப் பல‌ மருத்துவக் குணங்களை கொண்டது.
கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

  • சருமத்துக்கு மிகவும் நல்லது.
  • மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.
  • ரத்தத்தைச் சுத்தீகரிக்கும்
  • உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
  • வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
  • இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப் பொன்னாங்கண்ணி இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு.