மனிதர்களாகிய நமக்கு கண் பார்வை குறைய காரணம் என்ன?

எந்த ஒரு பொருளும் சரியாக பராமரித்தால் பல காலம் சிறப்பாக இயங்கும். வீட்டில் புதிய டிவி வாங்கியவுடன் அதனை தினமும் தூசிபடியாமல் துடைத்து வைக்கின்றோம்.

24 – மணிநேரமும் பார்ப்பதில்லை. சூடாகிவிடும். அதனால் அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். எவ்வளவு வோல்ட் மின்சாரம் பாய வேண்டுமோ அந்த அளவு மின்சாரம் கொடுக்கின்றோம். ஆனால் நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்!

குழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் பார்வை குறைகின்றது.

இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும்.
மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக

நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும்.
உடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும்.

பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும்.
அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும்.
மன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளால் கண் பாதிப்பு ஏற்படும்.

அதற்கு ஒவ்வொருவரும் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். மனதைப் பக்குவப்படுத்துவதோடு மட்டுமல்ல நமது உடலை, உடல் உள் உறுப்புகளை நேசிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி யோகப் பயிற்சி மட்டுமே.