சிகிச்சைக்காக வந்த இளம்பெண்களை மருத்துவர் செய்த மோசமான செயல்..

மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்த சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது.

கனடா நாட்டில் வாழ்ந்து வரும் நரம்பியல் டாக்டரான கெயித் ஹெடே என்பவர் சென்ற 30 ஆண்டுகளில் அவரிடம் சிகிச்சைக்காக வரும் இளம்பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்திருக்கிறார்.

மேலும், இதுவரை 28 பெண்களுக்கு பக்கமாக இவரின் இச்சைக்கு அடிபணிய வைத்திருக்கிறார். தலைவலி, தலை சுற்றல், மயக்கம் என்று எந்த காரணமாக இருந்தாலும் அந்த பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை செய்து வந்திருக்கிறார்.

இளம்பெண்களின் அந்தரங்க பகுதிகளை தொடுவதும், ஊசியால் குத்துவதும், உடைகளை அகற்ற சொல்வதும் என மோசமான செயல்களை செய்திருக்கிறார்.

இதனால் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவரை பற்றி புகார் அளிக்க, வரிசையாக மற்ற பெண்களும் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, பொலிசார் அந்த மருத்துவரை கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 17 வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.