சுதந்திரக்கட்சியின் நிறுவுனர்கள் தான் வருவதற்கு முன்னரே பண்டாரநாயக்கவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளனர்!

சுதந்திரக்கட்சியின் நிறுவுனர் பண்டாரநாயக்கவின் பிறந்ததின நிகழ்விற்கு தன்னை அழைக்காமல் நடத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

பண்டாரநாயக்கவின் 121வது பிறந்ததினத்தை முன்னிட்டு காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்கவின் சிலையின் முன்பாக இன்று சந்திரிகா, சுனேத்ரா ஆகியோர் மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

சந்திரிகா பண்டாரநாயக்க அங்கு வருவதற்கு முன்னதாகவே, காலை 8.30 மணியளவில் சுதந்திரக்கட்சியினர் அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் வைத்த பூச்செண்டு அங்கிருந்தது.

ஒவ்வொரு வருடமும் தந்தையின் பிறந்ததின நிகழ்வை நினைவுகூர்வதாகவும், எனினும் இம்முறை தன்னை அழைக்காமல் சு.கவினர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக சந்திரிகா தெரிவித்தார்.