திடீரென சம்பளத்தை உயர்த்திய… விஜய்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் பல வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளன, குறிப்பாக இவர் நடிப்பில் 2019 ஆம் வருடம் வெளியான பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிகில் திரைப்படம் நடிகர் விஜயின் படங்களிலேயே அதிகம் வசூலித்த படமாக உள்ளது, மேலும் இப்படம் 2019 ஆம் வருடத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பிகில் திரைப்படம் உலக அளவில் ஒட்டு மொத்தமாக 366 கோடி வரை வசூலித்துள்ளது.

பிகில் திரைப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் 50 கோடி ரூபாய் ஊதியமாகப் பெற்றுள்ளார்.பிகில் திரைப்படத்திற்குப் பின் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது சென்னையில் விஜய்சேதுபதி குறித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் தனது சம்பளத்தை உயர்த்தி கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் பல வெற்றிப் படங்கள் வெளிவந்து உள்ளதால் விஜய்யும் ரஜினிக்கு இணையான சம்பளத்தை கேட்பதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர், விஜய் சம்பளத்தை உயர்த்தி கேட்டதால் விஜய்யை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். இருப்பினும் சில தயாரிப்பு நிறுவனங்கள் விஜயின் பிரபலத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் கொடுக்கலாம் என கூறியுள்ளது. அந்த வகையில் விஜய் இனிமேல் பெரிய தயாரிப்பாளரின் படங்களில் மட்டுமே நடிப்பார் என தெரிகிறது.

குறிப்பாக விஜய்யின் அடுத்த படத்தை தயாரிப்பதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் தனது ஒரு படத்திற்கு ஊதியமாக ரூபாய் 60 முதல் 70 கோடி வரை வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.