கணவனின் கணக்கில்லா கள்ளக்காதல் உறவு..! அதிகாலையில் மனைவி எடுத்த விபரீத முடிவு!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள இரியூர் தாலுகா தலவட்டி கிராமத்தை சார்ந்தவர் அருண்குமார் (வயது 40). இவர் தனியார் பேருந்து ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் லதா (வயது 31). லதா அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

இவரால் இருவருக்கும் அம்ருதா என்ற 13 வயதுடைய பெண் குழந்தை உள்ள நிலையில்., அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த சமயத்தில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் இவர்களின் இல்லத்தில் இருந்து கரும்புகை வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாது எவ்விதமான அலறல் சத்தமும் கேட்காததால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இந்த நேரத்தில் அருண்குமார்., லதா மற்றும் அம்ருதாவின் உடல்கள் தீப்பற்றி இருந்துள்ளது. இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைத்துக்கொண்டு இருந்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அனைவரையும் மீட்டனர்.

பின்னர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அனைவரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., தனியார் பேருந்து ஏஜெண்டாக பணியாற்றி வந்த அருண்குமார் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக தெரியவருகிறது.

இந்த விவகாரம் அருண்குமாரின் மனைவி லதாவுக்கு தெரியவரவே., இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்., சம்பவத்தன்றும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை அடுத்து தற்கொலை செய்ய முடிவு செய்து மகளின் மீது முதலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து., பின்னர் தாங்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இவர்களின் இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.