இன்றைய நாளில் எந்த ராசிக்காரங்களுக்கு அதிஸ்ரம் தெரியுமா ? இதோ இன்றைய ராசிபலன் (01.01.2020)

( இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும். ஆசிர்வதிக்கப்பட்ட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2020 )

ஸ்ரீ விகாரி ஆண்டு – மார்கழி 16 – புதன்கிழமை (01.01.2020)
நட்சத்திரம் : சதயம் அதிகாலை 1.33 வரை பின்னர் பூரட்டாதி
திதி : சஷ்டி மாலை 6.18 வரை பின்னர் ஸப்தமி
யோகம்: அமிர்த – சித்த யோகம்
நல்லநேரம்: காலை 10.45 – 11.45 / மாலை 4.30 – 5.30

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 01 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தந்தையின் நீண்டநாளைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உதவியுடன் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணத்தால் பணலாபம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் தேவை அறிந்து உதவி செய்வார்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழியில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். மற்றவர்களுடன் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர் களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கடகம்
கடகராசி அன்பர்களே!

மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. அலுவலகத்தில் எதிர் பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும்.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர் களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்
துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. தாய் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி வரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதுடன் செலவும் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் உடல் அசதி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும். அதிகாரிகளின் ஆதரவில் காரிய அனுகூலம் உண்டாகும். அலுவல கத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பம் தொடர்பான வேலைகளுக்காக பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். அலுவலகத் தில் சக ஊழியர்களைப் பற்றி விமர்சிக்கவேண்டாம். பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியா பாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த் திக் கடனை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப் படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனம்
மீனராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆனால், தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன ரக ஆடைகளை வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத் தில் திடீர் செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.